பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய மாத்திரைகள், ஜெல் வகைகள் போன்ற சட்டவிரோதமான மருந்துவகைகளை பொலிஸார் நேற்று கொழும்பு குணசிங்கபுர பகுதி வீடொன்றில் கைப்பற்றினர். இவற்றை, நாட்டுக்குள் கொண்டுவந்த 61 வயது நபர் குணசிங்கபுர வீட்டில்டொன்றில் களஞ்சியப்படுத்தியிருந்தார். இதன்போதே, இந்நபரை குற்றத்தடுப்பு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்
இந்த நபர் பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய மருந்து வகைகளை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து கொழும்பு 12 சில்வா சுஜித் கறைுக்குத் தெருவிலுள்ள வீடொன்றில் களஞ்சிப்படுத்தியிருந்தார்.
மேல்மாகாண கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் புத்திக்க ராஜபக்சவுக்கு (உ.பொ.அலுவலகர்) கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
தெஹிவளை கல்கிஸ்ச விசேட நிருபர்