427
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 மாதங்களுக்கு ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை அவர், மேல் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடமையாற்றி வந்த பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கான பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அது நீடிக்கப்பட்டு வந்து நிலையில் தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.