ஈரான் ஜாதிபதி இப்ராஹிம் ரைசியின் துருக்கி விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறவில்லை. நேற்று நவம்பர் 28 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி துருக்கி வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அவரது வருகை இடம்பெறவில்லை என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் கூறியுள்ளார். இந்த விஜயம் பற்றி எர்துவான் இந்த மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். இரு தலைவர்களும் காசா போர் தொடர்பில் கூட்டு அறிவிப்பு ஒன்றை விடுக்கப்போதாகவும் அப்போது கூறப்பட்டது.
கடந்த நவம்பர் 11 ஆம் திகதி ரியாதில் இடம்பெற்ற பிராந்திய மாநாட்டுக்கு பங்கேற்கச் செல்லும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய எர்துவான், “ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இந்த மாதம் 28 ஆம் திகதி இங்கு வருவார்” என்றார்.
இந்நிலையில் எர்துவான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரைசியுடன் தொலைபேசியில் பேசியதாக துருக்கி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.