272
நாட்டில் பதிவான பலத்த மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 2,17,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இவர்களில் 51,572 குடும்பங்கள் அடங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அனர்த்தங்களினால் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 103 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.