பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று முன்தினம் (21) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற 52ஆவது பங்களாதேஷ் ஆயுதப்படை தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் HE Tareq Md Ariful Islam வரவேற்றார்.
சிறப்புரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளைப் பாராட்டியதுடன், நீண்டகால உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இரு நாட்டு இராணுவங்களுக்கிடையேயான உறவை வரையறுத்துள்ள ஒத்துழைப்பு மற்றும் நட்புறவைக் குறிப்பிடுகையில், பயங்கரவாதம், கடற்கொள்ளையர், கூட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் பிற நாடு கடந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள், பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி, இருதரப்பு அறிவுப் பரிமாற்றம் தொடர்பில் நினைவு கூர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.