களுத்துறை மாவட்ட அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2023 – கலை இலக்கிய விழாவில் வரலாற்றில் முதல் முறையாக அகலவத்தை டார்டன்பீல்ட் தோட்ட கணபதி அறநெறி பாடசாலையில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் அதே தோட்டத்தைச் சேர்த்த பிரபல கலைஞர் முனிசாமி அரி என்பவருக்கும் இச் சந்தர்ப்பத்தில் சித்திரம் மற்றும் மூர்த்தி சிற்பக் கலைக்கான “கலாகீர்த்தி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் வைபவத்தின் பிரதம அதிதியாக களுத்துறை மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி திலங்கா வெத்தசிங்க கலந்து கொண்டார். அகலவத்தை பிரதேச செயலாளர், மேல் மாகாண கலாசார திணைக்கள அதிகாரிகள் உட்பட பிரமுகர் பலரும் கலந்து கொண்டு வைபவத்தை சிறப்பித்தனர்.
களுத்துறை சுழற்சி நிருபர்