அமரர் டி. ஏ. ராஜபக் ஷ ஞாபகார்த்த பேருரை எதிர்வரும் (16) வியாழன் பிற்பகல் 04 மணிக்கு கொழும்பு 07 இல்,உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பற்றிய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி ராஜ் சோமதேவவினால் ‘இலங்கையின் பண்டைய நிர்வாக கோட்பாடுகள்’ எனும் தலைப்பில் நினைவுப் பேருரை நடத்தப்படும்.
ஸ்ரீ பாதஸ்தானதிபதியும் இரத்தினபுரி பொத்குல் ரஜமஹா விஹாரை மற்றும் பெல்மடுல்ல ரஜமஹா விஹாரை ஆகியவற்றின் விஹாராதிபதியுமான அதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கலந்து சிறப்பிக்குமாறு டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் மன்றம் அழைப்பு விடுக்கிறது.