184
பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மோதலில் மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ பீடங்களை
சேர்ந்த மாணவர்களுக்கு இடையிலேயே மோதல் இடம்பெற்றதாகவும் இதில் பல் மருத்துவ பீட மாணவர்கள் மூவரே படுகாயமடைந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மூவரும் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல்ச் சம்பவம் தொடர்பாக பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.