தன்னை, பதவி விலகுமாறு பொது வெளியில் சுமந்திரன் எம்.பி கூறிய கருத்தானது மிகுந்த கவலையளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் இரா. சம்பந்தன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா,சம்பந்தன் ஆகியோர் அண்மையில் சந்தித்து பேசியிருந்தனர். இச்சந்திப்பிலே, இரா,சம்பந்தன் தனது மனவருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டுமென சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்களையடுத்து,தன்னை சந்திக்குமாறு மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்தே,இவ்விருவரும் சந்திப்புக்களில் ஈடுபட்டனர். முதலாவது சந்திப்பில் சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தை வெளியிட்ட சமபந்தன், இவ்விடயம் சம்பந்தமாக விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்,இதுகுறித்து உறுதியான தீர்மானம் எடுக்கலாமென்ற தொனிப்படவும் சம்பந்தன் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.