544
சட்டவிரோதமாக தங்கத்தை கடத்த முயன்ற ஐவர், மன்னார் ஒழுதுடுவை பகுதியில் கைதாகினர்.கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையிலே, இவர்கள் கைதாகினர். 2.15 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற இவர்களி முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கரவண்டிகளையும் படையினர் கைப்பற்றினர். கைதான சந்தேகநபர்கள் 28 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களாவர். இவரகள் வங்காலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்களென்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.கைதாவர்கள் மற்றும் இவர்களது வாகனங்கள் என்பன காங்கேசன்துறை சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.