277
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைந்துள்ளதுடன், கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயால் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம்வரையான காலப்பகுதியில் 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அப்பிரிவு தெரிவித்தது.
மேல் மாகாணத்தில் அதிகளவாக 32,862 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் 7,878 பேரும் வடமேல் மாகாணத்தில் 5,671 பேரும் சப்ரகமுவ மாகாணத்தில் 5,651 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்தது.