270
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றுக் காலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.