மலையக மக்களுக்கான மாற்றம் தனது வாழ்நாளுக்குள் ஏற்படுத்தப்படுமென அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று தெரிவித்தார்.
அத்துடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 14,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பு – சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற நாம் – 200 நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக அனைத்து மாவட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படுமென அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்;.
மலையக மக்களுக்கான மாற்றத்தை தனது வாழ்நாளிற்குள் கட்டாயம் ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந் நிகழ்வில் உறுதியாக குறிப்பிட்டார்.