யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் வைத்தியசாலையில் பாதுகாப்பு சேவையை மேற்கொள்ளும் தனியார் நிறுவன நிர்வாகத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர்,நோயாளியை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை வாயிலில் வைத்து தாக்கியமை தொடர்பாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேறு சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பாகவும் கொழும்பில் உள்ள LRDC பாதுகாப்பு தலைமை நிறுவனத்தில்( தனியார் பாதுகாப்பு நிறுவனம்) இருந்து உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நேற்று வைத்தியசாலையில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்தரையாடலில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் LRDC தலைமை உத்தியோகத்தர்களுக்கு சில ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
(யாழ். விசேட நிருபர்)