Monday, May 20, 2024
Home » அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 பேருக்கு இலவச சத்திரசிகிச்சை

அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 பேருக்கு இலவச சத்திரசிகிச்சை

by sachintha
October 17, 2023 9:52 am 0 comment


அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் பார்வை குன்றிய 120 பேருக்கு இலவச சத்திரசிகிச்சைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் அனுசரணையுடன் இலவச சத்திரசிகிச்சைகள் அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் ஜயசிரி டயஸ் தலைமையிலான குழுவினர் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டனர். இதன்போது லண்டன் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன், இலங்கைக்கான தலைவர் பொறியியலாளர் ஹென்ஹி அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை பிரதேசத்தில் நான்கு வருடங்களுக்கு மேல் கண் சத்திரசிகிச்சைக்காக காத்திருந்த கண் பார்வை குன்றிய 120பேர் இதன்மூலம் பயனடைந்தனர்.

(இக்பால் அலி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT