Sunday, May 19, 2024
Home » யுத்தம் ஒரு போதும் தீர்வாகாது பலஸ்தீன தூதுவரிடம் மஹிந்த

யுத்தம் ஒரு போதும் தீர்வாகாது பலஸ்தீன தூதுவரிடம் மஹிந்த

by sachintha
October 17, 2023 8:09 am 0 comment

இஸ்ரேல்,பலஸ்தீனத்துக்கிடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

பலஸ்தீன தூதருடன் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்‌ஷ பலஸ்தீனர்களின் ஐக்கியத்தை வலியறுத்தினார். இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த:
பலஸ்தீன ஒற்றுமைக்கான இலங்கைச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன்.

உலகில் எங்கும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை.போர் ஒரு தீர்வுமில்லை. சமாதானமே அவசரத் தேவை.போரினால் இலங்கை பெற்ற அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகள் பலவற்றையும் அவர் பலஸ்தீன தூதுவரிடம் எடுத்து விளக்கினார்.

இரு நாடுகளிலுமுள்ள பொதுமக்களின் செழிப்பான வாழ்வைக் கருதி சமாதானம் விரும்பப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT