Home » பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கலை விழாவின் இறுதிப்போட்டி

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கலை விழாவின் இறுதிப்போட்டி

by damith
October 16, 2023 7:13 am 0 comment

பல்கலைக்கழக மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் நோக்கில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக கணக்கியல் பிரிவு மற்றும் நிதி முகாமைத்துவ சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான நானாவித கலைவிழாக்களின் இறுதிப்போட்டி கடந்த 12 ஆம் தேதி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கு லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் குத்து விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எம். எம் பத்மலால், பீடாதிபதி கலாநிதி துஷான் ஜயவிக்ரம, கணக்கியல் கல்விப் பிரிவு கற்கைகளின் தலைமை சிரேஷ்ட பேராசிரியர் கென்னடி குணவர்தன, எல் பி பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மலித் ஹேவகே ஆகியோர் பங்குபற்றினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT