187
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பதால் மாதந்தோறும் உண்டியல் வருமானம் ரூபா நூறு கோடியை தாண்டுகிறது. கலியுக கண்கண்ட தெய்வம் எனப்போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானில், பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனால்,உண்டியல் வருமானமும் அதிகரிக்கிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு நாளைக்கு 600
பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். 1990 முதல் நாளொன்றுக்கு 32 ஆயிரத்து 333 பக்தர்கள் வரத்தொடங்கினர். இதனால்,ஒரு வருடத்தில் 1.18 கோடி பக்தர்கள் ஆலயத்தை
தரிசித்து வந்தனர். கடந்த 2000ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து, 2 கோடி 37 லட்சத்து 25 ஆயிரமானது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)