Friday, May 17, 2024
Home » வீடு உடைத்து பொருட்கள் திருடிய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது!

வீடு உடைத்து பொருட்கள் திருடிய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது!

- ரூ. 7 இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு

by Rizwan Segu Mohideen
October 9, 2023 4:46 pm 0 comment

வீடு உடைத்து பொருட்களைத் திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மூன்று கோவில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு உரிமையாளர், மட்டக்களப்பிலுள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்று நீண்ட நாட்களுக்கு பின் வருகை தந்து வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீடு உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்த வீட்டு உரிமையாளர் குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்த கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதோடு குறித்த வீட்டில் திருடப்பட்ட 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் இருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்பட்டுள்ளதோடு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை, விரைவில் கைது செய்ய நடவடிக்கைக எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விலையுயர்ந்த தொலைக்காட்சி, நீர்ப்பம்பி, மடி கணனி, பெறுமதி வாய்ந்த கையடக்கத் தொலைபேசி, சமையல் எரிவாயு சிலிண்டர், பெறுமதியான மணிக்கூடு போன்றன மீட்க்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT