631
கிழக்கு மாகாண பதில் கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் நேற்று திங்கட்கிழமை (02) கடமையேற்றார்.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தனது 60 வது வயதில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்நுழைந்த இவர், 2017 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தராக பதவி உயர்த்தப்பட்டார். இள வயதில் மட்டு. வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபராகவும் கடந்த நான்கு வருடங்களாக மட்டு. வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(காரைதீவு குறூப் நிருபர்)