Monday, May 6, 2024
Home » நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு இன்று கொழும்பில்

நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு இன்று கொழும்பில்

by sachintha
October 3, 2023 8:35 am 0 comment

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பொன் விழாவின் பிரதான நிகழ்வுகளில் மற்றுமொரு நிகழ்வாக ‘நளீம் ஹாஜியார் நினைவுச் சொற்பொழிவு’ இன்று (03) செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நளீம் ஹாஜியார் நினைவுப் பேருரை மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி ரிப்கி காஸிம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ‘கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் (நளீமி) பிரதான உரை நிகழ்த்துவார். முதல்வரின் பிரதான உரையைத் தொடர்ந்து ‘கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி; அறிவுத்துறைப் பங்களிப்பும் ஆய்வுப் பணிகளும்’ எனும் தலைப்பில் ஆய்வு நூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து ‘கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி – அறிவுப் பங்களிப்பு’ எனும் தலைப்பில் ஜாமிஆ நளீமிய்யாவின் அரபு மொழி கற்கைத் துறைத் தலைவர் கலாநிதி அஷ்ஷெய்க் ஏ.பீ.எம் அப்பாஸ் (நளீமி) விசேட உரை நிகழ்த்துவார்.

மேற்படி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் ஜாமிஆ நளீமிய்யா பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் விசேட அதிதியாக கலந்துகொள்வதுடன், கௌரவ அதிதியாக ராபிதாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். லாபிர் மதனியும் கலந்து சிறப்பிப்பர்.

இந்நிகழ்வில், உலமாக்கள், கல்விமான்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நளீமிய்யாவின் விரிவுரையாளர்கள், நளீமிய்யாவின் பழைய மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பல்துறைசார் ஆளுமைகள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக நளீம் ஹாஜியார் நினைவுப் பேருரை மன்றத்தின் செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் டி. ஷாகிர் (நளீமி) தெரிவித்துள்ளார்.

(அஜ்வாத் பாஸி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT