Tuesday, May 14, 2024
Home » களுத்துறை ‘சிறகு ஒன்றியத்தின்’ ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட்

களுத்துறை ‘சிறகு ஒன்றியத்தின்’ ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட்

by damith
October 2, 2023 6:00 am 0 comment

களுத்துறை மாவட்டத்தின் பெருந்தோட்ட தமிழ் மக்கள் சமூகத்தை சார்ந்த மாணவர்களை விளையாட்டுத் துறையில் சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கத்தில் ‘களுத்துறை சிறகு ஒன்றியத்தின்’ சிறகு ஸ்போர்ட்ஸ் அகடமியின் முயற்சியில் களுத்துறை மற்றும் மத்துகம கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பத்து பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் விளையாட்டுத்திறனை கண்டறிவதற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியொன்று கடந்த (24) யட்டதொல எல்.ஜி .

லியனாராச்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஜனாதிபதியின் விசேட ஒருங்கிணைப்பாளர் சஜன சூரிய ஆரச்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்

இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவரான சுப்பையா ஆனந்தகுமார், மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிரிசோம லொகுவிதாரன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக களுத்துறை சிறகு ஒன்றியத்தின் போசகர்களும் களுத்துறை மற்றும் மத்தும கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்ததோடு பத்து பாடசாலைகள் கலந்து கொண்ட இந்த போட்டி தொடரில் அரப்பலகந்த பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT