இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் நேற்று (22) அறிவிக்கப்பட்டது.
பாபர் அசாஸ் தலைமையிலான இந்த அணியில் முக்கிய மாற்றமாக காயத்தினால் வெளியேறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
தவிர இந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் உசாமா மிர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் பெற்ற உசாமா மிர் நடந்து முடிந்த ஆசிய கிண்ணத் தொடரில் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதல் இடத்தை பெற்றிருந்தபோதும் அந்த அணி ஆசிய கிண்ணத் தொடரில் சோபிக்கத் தவறியதை அடுத்தே உலகக் கிண்ணத்திற்கான அணித் தேர்வில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியுடன் உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கும் பாகிஸ்தான் அணி ஒக்டோபர் 3 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளது. பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி ஹைதராபாத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
பாகிஸ்தான் குழாம்: பகார் சமான், இமாமுல் ஹக், அப்துல்லா ஷபீக், பாபர் அசம் (தலைவர்), மொஹம் ரிஸ்வான் (தலைவர்), சவுத் ஷகீல், இப்திகார் அஹமட், அகா சல்மான், ஷதாப் கான், உசாமா மிர், மொஹமட் நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவுப், மொஹமட் வசீம் ஜூனியர், ஹசன் அலி.