மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற SSCC-PIKL ஹொக்கி போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துப்படுத்தி பங்கேற்ற மாத்தறை புனித தோமஸ் கல்லூரியின் 20 வயதுக்கு உட்பட்ட ஹொக்கி அணி அந்தத் தொடரில் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
கடந்த செப்டெம்பர் 6 தொடக்கம் 11 ஆம் திகதி வரை மலேசியாவில் இடம்பெற்ற இந்தத் தொடருக்கு தாய்லாந்து, சிங்கப்பூர், சீன தாய்ப்பே, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவம் செய்து பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழகங்கள் என பல அணிகள் பங்கேற்றன.
கல்லூரியின் பழைய மாணவரும் தேசிய அளவில் பல வெற்றிகளை பெற்றுத் தந்தவருமான திலின மங்கல கல்லூரியின் ஹொக்கி பயிற்சியாளராக செயற்படுவதோடு புனித தோமஸ் கல்லூரி அணிக்கு பொறுப்பாக, கல்லூரியின் ஹொக்கி விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் கபில பஸ்நாயக்க இந்தப் போட்டியில் அணியுடன் பங்கேற்றிருந்தார்.