16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (17) கொழும்பில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓட்டங்களில் சுருண்டது. இறுதியில், இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்தியா 8 ஆவது முறையாக ஆசிய கோப்பை வென்று சாம்பியன் ஆனது.
பந்துவீச்சில் மிரட்டிய முஹமட் சிராஜ் 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், குறைந்த பந்துகளில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய சமிந்த வாஸ் சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில், 6 விக்கெட் வீழ்த்திய முஹமட் சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் மூலம் கிடைத்த அவருக்கு 5,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்.
இதுதொடர்பாக, சிராஜ் கூறுகையில், இந்த பரிசை மைதான வீரர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என தெரிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு அனைவரையும் வியக்க வைத்ததோடு, சிராஜின் செயலை கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.