Sunday, May 19, 2024
Home » திருக்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்து; 21 வயது இளைஞன் பலி

திருக்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்து; 21 வயது இளைஞன் பலி

by Rizwan Segu Mohideen
September 17, 2023 12:46 pm 0 comment

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குடிநிலம் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (17) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக தெரியவருதாவது,

திருக்கோவிலில் இருந்து சாகாமம் குடிநிலம் நோக்கி பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள், பலத்த காற்று காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அதில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் சாகாமம் குடிநிலம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தர்மராசா நிதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர் – எஸ். கார்த்திகேசு)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT