Home » புட்டின்–கிம் சந்திப்புக்கு பல நாடுகளும் கவலை

புட்டின்–கிம் சந்திப்புக்கு பல நாடுகளும் கவலை

by gayan
September 16, 2023 10:42 am 0 comment

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும் இடையே நடந்த உச்சநிலைச் சந்திப்பு குறித்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

அந்த நாடுகளின் தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் அது குறித்துக் காணொளி வழி கலந்து பேசியுள்ளனர்.

வட கொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால், அது பியோங்யாங்கிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறும் செயலாக இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மொஸ்கோவும் பியோங்யாங்கும் இராணுவ ஒத்துழைப்பில் ஈடுபடக் கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ரஷ்யாவும் வட கொரியாவும் அதற்கு விலை கொடுக்க வேண்டிவரும் என்று தென் கொரிய தேசியப் பாதுகாப்பு சபை எச்சரித்தது. இந்நிலையில் கிம் ரஷ்யாவில் இன்னும் சில நாட்கள் தங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT