திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் திங்கட்கிழமை (11) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
Voice of Srilanka அமைப்பினால் கிழக்கு மக்களின் குரல் ஊடாக 100 கண் சத்திரசிகிச்சை வில்லைகள் வழங்கி வைக்கப்பட்டன.
சுகாதார நெருக்கடி காரணமாக சத்திர சிகிச்சைகள் பிற்போடப்பட்டு இருக்கும் நிலையில், மக்களின் நலனுக்காக இந்த வில்லைகள் இத்தாலி நாட்டில் வசித்து வரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் கண் வைத்திய நிபுணர் மங்கள திஸாநாயக்கவிடம் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி அருன் ஹேமச்சந்திரன் அதனை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் இத்தாலி நாட்டின் Voice of Srilankaவின் பிரதிநிதி ரங்கும்புர கெதர நிலூ என்பவரும் கலந்து கொண்டார்.
(ரொட்டவெவ குறூப் நிருபர்)