Monday, May 20, 2024
Home » போலி இணையதளமூடாக பாரிய மோசடிகள் அதிகரிப்பு

போலி இணையதளமூடாக பாரிய மோசடிகள் அதிகரிப்பு

எச்சரிக்கிறார் தபால் மா அதிபர்

by damith
September 11, 2023 8:50 am 0 comment

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி மோசடிகளை மேற்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பில் தபால் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் தமது உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக எந்தவொரு இணைய பரிவர்த்தனைகளையும் மேற்கொள்வதில்லை என தபால் மா அதிபர் ஆர். பி. குமார தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு போலியாக செயல்படும் மோசடியாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் போன்ற போலி இணையதளம் ஒன்றை உருவாக்கி பொதுமக்களின் வங்கி அட்டைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொண்டு, மோசடிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவ்வாறான மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் தபால் திணைக்களத்தின் இணைய முகவரியும் மோசடியான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் இந்த மோசடிகளில் அகப்பட வேண்டாம் என அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT