Sunday, May 12, 2024
Home » இளம் தாயொருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை

இளம் தாயொருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை

by Prashahini
August 23, 2023 2:07 pm 0 comment

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர்,  தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

அவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின்  குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.

தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லோகி தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மகாமணி தயானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

05 பக்கத்தில் கடிதமொன்றையும் அவர் எழுதியுள்ளார். குறித்த கடிதம், திருமண பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை என்பவற்றை தெப்பக்குளத்துக்கு அருகில் வைத்துவிட்டே குதித்துள்ளார். தன்னையும், தனது குழந்தையையும் கணவரும், அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்தினர் என இக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஹட்டன் சுழற்சி நிருபர்

தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT