Home » பாராளுமன்ற குழு அறையில் மெத்தை, தலையணை; செய்தி உண்மைக்குப் புறம்பானது

பாராளுமன்ற குழு அறையில் மெத்தை, தலையணை; செய்தி உண்மைக்குப் புறம்பானது

- பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மறுப்புத் தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
August 17, 2023 5:42 pm 0 comment

– குறித்த சம்பவத்துடன் இணைந்ததாக இடம்பெற்றதாக தெரிவிக்கும் சம்பவம் தொடர்பில் ஊழியர் பணிஇடைநீக்கம்

பாராளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற வீடு பராமரிப்புப் பிரிவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 2023 ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த திகதிகளில் வெளியிடப்பட்ட ஊடக செய்திகள் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, இக்குழு தற்பொழுது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பணியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், பாராளுமன்ற பெண் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட குழுவின் உறுப்பினர்களை நேரில் சந்தித்தோ அல்லது தொலைபேசி மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் இது தொடர்பான விடயங்களைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அல்லது உதவிச் செயலாளர் நாயகத்தைச் சந்தித்து தகவல்களை முன்வைக்க முடியும் என உள்ளக சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ரோஹணதீர குறிப்பிட்டார்.

தற்பொழுது இந்தக் குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற நிலையில் இடம்பெற்று வருவதாகவும், ஏதாவதொரு அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT