இரத்தினபுரியில் நேற்று (16) மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மாணிக்கக்கல் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கஹவத்தை, கட்டங்கே பகுதியில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல் ஒன்று ஏலத்தில் 43 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
‘ப்ளூ சஃபையர்’ (Blue Sapphire) எனப்படும் இந்த வகை நீலக்கல் 99 கரட் என மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையில் கஹவத்த பிரதேசத்தில் இந்த நீலக்கல் ஏலம் விடப்பட்டது.
இதில் இரத்தினபுரி மாவட்டத்தின் பிரபல மாணிக்கக்கல் வர்த்தகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதன்படி, பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கக்கல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்