658
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானது.
ஏறாவூர் பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் அரையிறுதியில் அம்பலாந்துறை மகா வித்தியாலயத்தையும், இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியையும் கார்மல் பற்றிமா கல்லூரி அணி தோற்கடித்தது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்