Monday, May 20, 2024
Home » பாம்பிடம் தப்பிய இசுரு

பாம்பிடம் தப்பிய இசுரு

by sachintha
August 14, 2023 1:04 pm 0 comment

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளின்போது பாம்பு மைதானத்தை ஆக்கிரமிப்பது தொடர்ச்சியாக நிகழும் சம்பவமாக மாறியுள்ளது. கடந்த பல போட்டிகளிலும் போட்டி நேரத்தில் மைதானத்திற்கு பாம்பு வந்ததை காண முடிந்தது.

இவ்வாறான ஒரு சம்பவம் கடந்த சனிக்கிழமை (12) நடைபெற்ற போட்டியிலும் இடம்பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரரான இசுர உதான களத்தடுப்பில் அவதானம் செலுத்தி இருந்தபோது பாம்பு ஒன்றை மிதிப்பது நூலிழையில் தவிர்க்கப்பட்டது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் பி லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

முன்னதாக கோல் டைடன்ஸ் மற்றும் தம்புள்ள அவுரா அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற போட்டியின்போதும் பாம்பு வந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT