உகண்டா நாட்டின் விக்டோரியா எரியில் படகு மூழ்கிய விபத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் படகு கடந்த புதன்கிழமை (02) மூழ்கும்போது அளவுக்கு அதிகமாக 34 பேரை ஏற்றி இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படகில் கரி, உணவு மற்றும் மீன்கள் கொண்ட பல பொதிகளும் ஏற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்துடன் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
உகண்டாவில் படகு விபத்துகள் வழக்கமான ஒன்றாக உள்ளது. உகண்டா மற்றும் கொங்கோ எல்லையில் உள்ள அல்பர்ட் ஏரியில் கடந்த 2020 ஆம் ஆண்டு குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர்.
அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தலைநகர் கம்காலாவுக்கு அருகில் விக்டோரியா ஏரியில் சுமார் 100 பேரை ஏற்றிய படகு மூழ்கிய விபத்தில் பல டஜன் பேர் பலியாகினர்.