Saturday, May 11, 2024
Home » வடக்கு, கிழக்கு, அநுராதபுரம் மக்களுக்கே வவுனியாவில் கடவுச்சீட்டு பெற முடியும்

வடக்கு, கிழக்கு, அநுராதபுரம் மக்களுக்கே வவுனியாவில் கடவுச்சீட்டு பெற முடியும்

- குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
August 3, 2023 2:17 pm 0 comment

இன்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாணம், கிழக்கு மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலையே இதனைத் தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் வந்து செல்வதால், பொதுமக்களின் நெரிசலை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் பொருட்டு இநநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT