Monday, May 20, 2024
Home » இரு குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

இரு குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

by sachintha
August 2, 2023 6:37 pm 0 comment

உலகம் அழிவதை காரணம் காட்டி தனது இரு குழந்தைகளையும் கொலை செய்தது மற்றும் தனது கணவரின் முன்னாள் மனைவியை கொலைசெய்ய சதி செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவில் தாய் ஒருவருக்கு தொடர்ச்சியாக மூன்று ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தனது 16 வயது மகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட ஏழு வயது மகனை கொலை செய்ததாக கடந்த மே மாதம் லொரி வலோ என்ற பெண் குற்றங்காணப்பட்டார்.

தம்மை தேவதை என்று குறிப்பிட்டிருக்கும் 50 வயதான வலோ, இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கு தயார் படுத்தும் பணியை செய்வதாக தெரிவித்துள்ளார்.

வலோவின் குழந்தைகள் 2019 ஆண்டு காணாமல்போனதை அடுத்தே இந்த விவகாரம் அவதானத்தை பெற்றது. தொடர்ந்து இடாஹோவில் இருக்கும் வலோவின் கணவரது இடத்தில் 2020 ஜூன் மாதத்தில் இரு குழந்தைகளதும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT