2023 ஆம் ஆண்டுக்கான 14 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சமபோச கால்பந்தாட்ட சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியும், திருகோணமலை, கிண்ணியா முஸ்லிம் மத்திய கல்லூரியும் தகுதி பெற்றுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமான இச் சுற்றுப் போட்டி இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த 32 மைதானங்களில் நடைபெற்றன. கொழும்பு ஸாஹிராக் கல்லூரி, மாத்தளை ஸாஹிராக் கல்லூரியை 2–1 என்ற கோல் அடிப்படையிலும், மாவனல்லை, அல் பதுறியா மகா வித்தியாலயத்தை 2–0 என்ற கோல் அடிப்படையிலும் வென்று, அரை இறுதிப் போட்டியில் மலியதேவ மாதிரி பாடசாலையை 4–3 என்ற கோல் அடிப்படையிலும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்