வவுனியா, ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் இடியன் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலத்தை ஓமந்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஓமந்தை பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் குஞ்சுக்குளம் பகுதியில் தோட்டச் செய்கையில் ஈடுபட்டுவந்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை குறித்த காணிக்கு அருகில் சூட்டுக்காயங்களுடன் அவரது சடலம் கிடப்பதை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
சம்பவத்தில் ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த ச. டிசாந் என்ற 21 வயதான இளைஞரே மரணமடைந்துள்ளார். அவரது சடலத்திற்கு அருகில் இடியன் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வவுனியாவில் இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதுடன் அண்மையில் நெடுங்கேணிப்பகுதியிலும் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா விசேட நிருபர்