மலையக பகுதிகளில் அண்மைக் காலமாக குளவி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர்ஹாம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐந்து தொழிலாளர்கள் சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த தோட்ட பகுதியில் உள்ள 10 ஆம் இலக்க தேயிலை மலையில், கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் மரத்தில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று கலைத்ததால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் ஐந்து பெண் தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
டி.சந்ரு