Monday, May 20, 2024
Home » லிந்துலை லயன் குடியிருப்பில் தீவிபத்து; 10 வீடுகள் தீக்கிரை

லிந்துலை லயன் குடியிருப்பில் தீவிபத்து; 10 வீடுகள் தீக்கிரை

by Prashahini
July 26, 2023 8:58 am 0 comment

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை – இராணிவத்தை தோட்டத்தின் நேற்றிரவு (25) ஏற்பட்ட தீ விபத்தால் 20 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளது. மேலும், சில வீடுகள் பகுதியளவில் சேதமமைந்துள்ளது. இதனால் இந்த குடும்பங்களை சேர்ந்த 56 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீ விபத்த ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் வந்த நிலையில்,  அதற்குள் தீ வேகமாக பரவியது. பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், லிந்துலை பொலிஸாருடன் இணைந்து சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

தீயினால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹட்டன் சுழற்சி நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT