வவுனியா நகரில் உணவகம் ஓன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளது.
வவுனியா நகரில் கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு எதிரே இருந்த உணவகமொன்று நேற்று (19) இரவு 8.20 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த உணவகத்தில் கடமையாற்றுபவர், வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கிய நிலையில் அங்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்த போதும் உணவகம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இருப்பினும் தொடராக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவவாத வண்ணம் தீ கட்டுப்பாட்டுக்குள் கெகாண்டு வரப்பட்டுள்ளது.
இத்தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா விசேட நிருபர்