Home » யாழில். இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழில். இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

by Prashahini
July 19, 2023 2:37 pm 0 comment

கைகளில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் இருந்தே நேற்று (18) இரவு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தாவடி கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் தேசிக்காய், பீடி, தீப்பெட்டி, பியர், ஊசி (சிரிஞ்) உள்ளிட்டவை காணப்படுவதால் போதையில் தன் கைகளை தானே வெட்டியதால், இரத்த போக்கு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT