Monday, May 20, 2024
Home » சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த சிறிய தந்தை; யாழில் சம்பவம்

சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த சிறிய தந்தை; யாழில் சம்பவம்

by Prashahini
July 18, 2023 12:04 pm 0 comment

12 வயதான சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த , தாயின் இரண்டாவது கணவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வசாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் 12 வயதான மாணவன் வாய் மற்றும் முகத்தில் நெருப்பினால் சுட்ட காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (17) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரே, சிறுவனுக்கு சூடு வைத்ததாகவும் , சூடு வைத்த காயங்கள் வெளியில் தெரியாதவாறு முக கவசம் அணிந்து சிறுவனை வெளியில் நடமாட விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , சிறுவனுக்கு சூடு வைத்த நபரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT