Monday, May 20, 2024
Home » குடும்பத் தகராறு காரணமாக மனைவி கொலை; கணவன் கைது

குடும்பத் தகராறு காரணமாக மனைவி கொலை; கணவன் கைது

- மொணராகலையில் சம்பவம்

by Prashahini
July 17, 2023 3:42 pm 0 comment

மொணராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொணராகலை, கும்புக்கன வெல்லச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (17) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என்பதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொணராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT