1.5K
வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்படுவதை கண்டித்து இன்று (17) பிற்பகல் தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது,
அதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களை இணைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கச் செயலாளர் எஸ். பி. மெடிவத்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த போராட்டங்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையை சுற்றி அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.