பதுளை பசறை பிரதான வீதியில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பதுளை பிரதேச சபைக்குச் சொந்தமான ‘ஹெல பொஜுன் ஹல’ உணவகம் மற்றும் கம்யூனிகேஷன் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் நேற்று (13) மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
பிரதேச மக்கள் மற்றும் ஊவா பல்கலைக்கழகவருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த 20 பெண்களுக்கு இதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
பிரதேச சபையை வலுப்படுத்தும் திட்டம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி உதவி திட்டம் (LDSP)ஆகியவற்றின் நிதி உதவியுடன் 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் பிரதேச சபைக்கு புதிய வருமானத்தை ஈட்டும் வழியாகவும் அமையப்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா மற்றும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக ஆகியோரின்
இணைப்புச் செயலாளர்கள், பதுளை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரம்யசிறி மன்திலக மற்றும் பதுளை பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பதுளை தினகரன் விசேட நிருபர் எம்.செல்வராஜா