Monday, May 20, 2024
Home » சக பூசகர்களின் கைபேசிகளை திருடிய குற்றத்தில் பூசகர் கைது

சக பூசகர்களின் கைபேசிகளை திருடிய குற்றத்தில் பூசகர் கைது

by Prashahini
July 13, 2023 12:17 pm 0 comment

சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (12) இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள் களவாடப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் , பூசகர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அன்றைய தினம் ஆலயத்தில் நின்ற 25 வயதான பூசகர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT