Monday, May 20, 2024
Home » அட்டாளைச்சேனை அல்-நஜா கழகத்தினால் கௌரவிக்கப்பட்ட பிரதி பணிப்பாளர் றியாஸ்

அட்டாளைச்சேனை அல்-நஜா கழகத்தினால் கௌரவிக்கப்பட்ட பிரதி பணிப்பாளர் றியாஸ்

by sachintha
July 12, 2023 2:08 pm 0 comment

அட்டாளைச்சேனை அல் – நஜா விளையாட்டுக் கழகத்தினால் அம்பாறை மாவட்டஅனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.சி.எம்.றியாஸ் பிரதிப் பணிப்பாளராக அண்மையில் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தைப் பிறப்பிடமாக கொண்ட இவர், பல்வேறு சமூகப் பணிகளில் மிக நீண்ட காலமாக தன்னை அர்ப்பணித்து வருகின்ற ஒருவராக பாராட்டப்படுகின்றார். அட்டாளைச்சேனை அல் – நஜா விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகராக செயற்படும் இவருக்கு கழகத்தினால் 2023.07.09 ஆம் திகதி கௌரவம் வழங்கி வைக்கப்பட்டது.

கழகத்தின் தலைவர் ஏ.எம்.றிஸ்வான் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் சிரேஷ்ட, கனிஷ்ட நிருவாக உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

–றிசாத் ஏ. காதர்…

(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT