Friday, May 17, 2024
Home » 19 கல்வியல் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்

19 கல்வியல் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்

- கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு

by Prashahini
July 11, 2023 9:15 am 0 comment

தற்போது நடைமுறையில் உள்ள 19 அரச கல்வியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நேற்றைய தினம் (10) பத்தனை ஶ்ரீ பாத கல்வியல் கல்லூரிக்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிட்ட பின் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தற்போது க.பொ.த. (உ/த) பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் 3 வருடங்களுக்கே கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் அவை பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டதும் 4 வருடங்களுக்கு அவர்கள் கல்வி பயில சேர்த்துக் கொள்ளப்படுவதோடு, மாணவர் தொழிற்சங்கங்கள் உருவாகுவது அனுமதிக்கப்பட மாட்டாது. இதன் காரணமாக பயிற்றப்பட்ட பட்டதாரிகள் உருவதாகுவதற்கு வழி பிறக்கும்.

எனவே , இது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக்குறணை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT